Saturday, October 28, 2017

சுமையானாயே! (முதுமைக்காதல்)

சுமையானாயே! (முதுமைக்காதல்)




எதையும் இழக்கவில்லை
என்றுதான் நினைத்தேன்;
ஏமாந்தேனடி

உன் அருகாமையை இழந்தேன்;
என் ஆளுமையை இழந்தேன்  
உன் அரவணைப்பை இழந்தேன்;
என் ஆழ்மனம் இழந்தேன்  
உன் இம்சைகளை இழந்தேன்;
என் இன்பங்களை இழந்தேன்  
உன் முகக்காட்சி இழந்தேன்;
என் முகமலர்ச்சி இழந்தேன்
உன் கொஞ்சுதலை இழந்தேன்;
என் மிஞ்சுதலை இழந்தேன்  
உன் ஆறுதலை இழந்தேன்;
என் தேறுதலை இழந்தேன்

நான் உன்னை இழந்தேன்;
நான் என்னை இழந்தேன்

மலர்த்தொடுத்து மஞ்சம் வந்தவளே!
மலர்த்தூவி விடை கொடுத்தேனே!

கைவிரல் பிடித்தவளே!
கைவிட்டுப் போனாயே!
பாதியில் வந்தவளே!
மீதியும் வைத்தாயே!
என்னையும் அழைத்திடம்மா!

தூரம் சுகமென்றாயே!
பெண்ணே! சுமையானாயே!
அருகே அழைத்திடம்மா!

                                         -
சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...