தானாய்ச்சாவது மனிதம்
ஓரறி மரமது காய்ந்து
ஒருநூ றுயிர்சுமக்குது ஊர்ந்து
ஈரறி நத்தையூ றின்றிபோக
ஈரறிச் சங்குமுழங்குது இசையாக
மூவறி யெறும்புகரையான் கூட்டாக
மூச்சோடிப் போகும்வரைசுறு சுறுப்பாக
நாலறி வண்டுபறக்குது இரைதேடி
நாப்புறங் கூவியழைக்குது காக்காய்
ஐந்தறி கொண்டவுயிரது பாரடி
ஐயோ டொருசேர்ந்தது கணக்காய்
ஆறறி மனிதமோசித்தது ஐயோடி
மற்றறி வுயிரழித்தது தனக்காய்
கையிலவே கட்டுதுபுள் கூடு
குச்சிகளை சுமக்கவல் லலகு
தூரம்போய் எடுக்கநல் சிறகு
வேறிலவே ஆத்திரமுள் ளொருவீடு
கையுளதே துணைநரன் தேடுது
காடழித்தே கட்டும்தன் ஊரது
காட்டுயி ரழித்தது நிலது
தன்னின மழித்துமது வாழுது
றெக்கை முளைத்த புள்ளில்
கிளியுண்டு கழுகுண்டு காக்காயுமுண்டு
மயிலுண்டு குயிலுண்டு குருவியுமுண்டு
சிட்டுண்டு வாத்துண்டு புறாவுமுண்டு
காலில் நாலுள்ள வினத்தில்
நரியுண்டு பரியுண்டு நாயுமுண்டு
புலியுண்டு எலியுண்டு பூனையுமுண்டு
மாடுண்டு குரங்குண்டு கரடியுமுண்டு
இன்னு மின்னு மெத்தனையோ
இனத்தி லெத்தனையோ வுண்டு
அத்தனையு மினத்தி லெத்தனையோ
பகை மூண்டு மியற்கையுமுண்டு
இரண்டே காலினத்தே மனிதமுண்டு
இவ்வகையே இவ்வினமே ஒன்றேயுண்டு
புல்லழித்து புள்ளழித்து விலங்கழித்து
தரையழித்து தன்னழித்து தானாய்ச்சாவது
- சரவணபெருமாள்
ஓரறி மரமது காய்ந்து
ஒருநூ றுயிர்சுமக்குது ஊர்ந்து
ஈரறி நத்தையூ றின்றிபோக
ஈரறிச் சங்குமுழங்குது இசையாக
மூவறி யெறும்புகரையான் கூட்டாக
மூச்சோடிப் போகும்வரைசுறு சுறுப்பாக
நாலறி வண்டுபறக்குது இரைதேடி
நாப்புறங் கூவியழைக்குது காக்காய்
ஐந்தறி கொண்டவுயிரது பாரடி
ஐயோ டொருசேர்ந்தது கணக்காய்
ஆறறி மனிதமோசித்தது ஐயோடி
மற்றறி வுயிரழித்தது தனக்காய்
கையிலவே கட்டுதுபுள் கூடு
குச்சிகளை சுமக்கவல் லலகு
தூரம்போய் எடுக்கநல் சிறகு
வேறிலவே ஆத்திரமுள் ளொருவீடு
கையுளதே துணைநரன் தேடுது
காடழித்தே கட்டும்தன் ஊரது
காட்டுயி ரழித்தது நிலது
தன்னின மழித்துமது வாழுது
றெக்கை முளைத்த புள்ளில்
கிளியுண்டு கழுகுண்டு காக்காயுமுண்டு
மயிலுண்டு குயிலுண்டு குருவியுமுண்டு
சிட்டுண்டு வாத்துண்டு புறாவுமுண்டு
காலில் நாலுள்ள வினத்தில்
நரியுண்டு பரியுண்டு நாயுமுண்டு
புலியுண்டு எலியுண்டு பூனையுமுண்டு
மாடுண்டு குரங்குண்டு கரடியுமுண்டு
இன்னு மின்னு மெத்தனையோ
இனத்தி லெத்தனையோ வுண்டு
அத்தனையு மினத்தி லெத்தனையோ
பகை மூண்டு மியற்கையுமுண்டு
இரண்டே காலினத்தே மனிதமுண்டு
இவ்வகையே இவ்வினமே ஒன்றேயுண்டு
புல்லழித்து புள்ளழித்து விலங்கழித்து
தரையழித்து தன்னழித்து தானாய்ச்சாவது
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment