Monday, October 16, 2017

தானாய்ச்சாவது மனிதம்

தானாய்ச்சாவது மனிதம்  




ஓரறி மரமது காய்ந்து

          ஒருநூ றுயிர்சுமக்குது ஊர்ந்து
ஈரறி நத்தையூ றின்றிபோக
          ஈரறிச் சங்குமுழங்குது இசையாக
மூவறி யெறும்புகரையான் கூட்டாக
          மூச்சோடிப் போகும்வரைசுறு சுறுப்பாக
நாலறி வண்டுபறக்குது இரைதேடி
          நாப்புறங் கூவியழைக்குது காக்காய்
ஐந்தறி கொண்டவுயிரது பாரடி
          ஐயோ டொருசேர்ந்தது கணக்காய்
ஆறறி மனிதமோசித்தது ஐயோடி
          மற்றறி வுயிரழித்தது தனக்காய்

கையிலவே கட்டுதுபுள் கூடு

          குச்சிகளை சுமக்கவல் லலகு
தூரம்போய் எடுக்கநல் சிறகு
          வேறிலவே ஆத்திரமுள் ளொருவீடு
கையுளதே துணைநரன் தேடுது
          காடழித்தே கட்டும்தன் ஊரது
காட்டுயி ரழித்தது நிலது
          தன்னின மழித்துமது வாழுது

றெக்கை முளைத்த புள்ளில்

          கிளியுண்டு கழுகுண்டு காக்காயுமுண்டு
மயிலுண்டு குயிலுண்டு குருவியுமுண்டு
          சிட்டுண்டு வாத்துண்டு புறாவுமுண்டு
காலில் நாலுள்ள வினத்தில்
          நரியுண்டு பரியுண்டு நாயுமுண்டு
புலியுண்டு எலியுண்டு பூனையுமுண்டு
          மாடுண்டு குரங்குண்டு கரடியுமுண்டு
இன்னு மின்னு மெத்தனையோ 
          இனத்தி லெத்தனையோ வுண்டு
அத்தனையு மினத்தி லெத்தனையோ
          பகை மூண்டு மியற்கையுமுண்டு
இரண்டே காலினத்தே மனிதமுண்டு
          இவ்வகையே இவ்வினமே ஒன்றேயுண்டு
புல்லழித்து புள்ளழித்து விலங்கழித்து
          தரையழித்து தன்னழித்து தானாய்ச்சாவது 

                                                  - சரவணபெருமாள்

          
          

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...