யார் பிச்சைக்காரன்
புண்ணியந்தேட பிச்சை போடும்
எண்ணமோடும் எவரும் கேளும்
பிச்சைபோட நீட்டிய கையில்
பிச்சை போட்டான் புண்ணியத்தை
பிச்சைக்கார னென்றே சொல்லி
பிச்சை யெடுக்க வந்தாய்நீ
சோறுகொண்டான் பிச்சைய னென்றால்
புண்ணியங் கொண்டான் பெயரென்ன
பசியென புசியென விட்டவனே
புனித னென்றே யாமுரைப்போம்
புசியென விட்ட சோறள்ளி
ருசியென நாய்க்கிட்ட னிறைவனே
- சரவணபெருமாள்
புண்ணியந்தேட பிச்சை போடும்
எண்ணமோடும் எவரும் கேளும்
பிச்சைபோட நீட்டிய கையில்
பிச்சை போட்டான் புண்ணியத்தை
பிச்சைக்கார னென்றே சொல்லி
பிச்சை யெடுக்க வந்தாய்நீ
சோறுகொண்டான் பிச்சைய னென்றால்
புண்ணியங் கொண்டான் பெயரென்ன
பசியென புசியென விட்டவனே
புனித னென்றே யாமுரைப்போம்
புசியென விட்ட சோறள்ளி
ருசியென நாய்க்கிட்ட னிறைவனே
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment