Sunday, October 22, 2017

யார் பிச்சைக்காரன்

யார் பிச்சைக்காரன்


புண்ணியந்தேட பிச்சை போடும்
          எண்ணமோடும் எவரும் கேளும்
பிச்சைபோட நீட்டிய கையில்
          பிச்சை போட்டான் புண்ணியத்தை
பிச்சைக்கார னென்றே சொல்லி
          பிச்சை யெடுக்க வந்தாய்நீ
சோறுகொண்டான் பிச்சைய னென்றால்
          புண்ணியங் கொண்டான் பெயரென்ன
பசியென புசியென விட்டவனே
           புனித னென்றே யாமுரைப்போம்
புசியென விட்ட சோறள்ளி
          ருசியென நாய்க்கிட்ட னிறைவனே

                                        - சரவணபெருமாள்
         

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...