Saturday, October 28, 2017

முதிர்கன்னி

முதிர்கன்னி


பூத்த திரு தினத்தில்
பூஜை போகும் பூ
போகாமலே
பூச்செடியில் தங்கினேன்

வழக்கம் மாறி
வண்டுகள் வந்து மொய்க்க
வழக்கத்தோடு வரும் வண்டுக்காக
செடியுள் மறைந்தேன்

தேநிறைந்த மலரைக் காக்க
மதுவுண்ட தந்தையம்மா
தாயென்ற செடியிலும்
நோயொன்று தாக்க
நானென்றானதம்மா

என்னோடு இருமொட்டு
உரமின்றி போக
உணவுக்காக நானுழைக்க
பூஜைக்கு அழைத்தே
வழக்கத்தோடு வந்த நாரை
வரவேற்கவில்லை

என் பின்
அரும்பிய மொட்டுக்கள்
மலராயின
மாலைக்கு நாருறித்தேன்
மாலை தொடுத்த நேரம்
அபசகுணம் என்றே
ஒதுக்கப்பட்டேன்

கையாலாகா தந்தை
கைதாங்கலாய் தாய்
சூழல் கண்டு
சுற்றிச்சுற்றி மீசை வர
தாழிட்டேன் வீட்டை
தள்ளிவிட்டே வாழ்கிறேன்

ஊடல் காற்றும்
உடலைத்தொட்டுச் சோதிக்க
உணர்வை அடக்கி
உள்ளத்தில் தாழ் போட்டேன்

இனி அவ்வளவுதான்
எண்பதிலும் கன்னியென்றெ
வெட்கம் கொள்வேன்
முதிர்கன்னியென்றே
முதிர்பூவாய் உதிர்வேன்

என் மகரந்தம்
மாலையின்றி
மலடானதே என் துயரம்

-    சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...