Tuesday, November 21, 2017

பாடல் கவிதை 3 - கண்ணா!

கண்ணா!
கல்லுக்குள் உணர் வுண்டு
என்றுநான் உனை நம்பி
உன்னடி சேர்ந்தேனடா!
கண்ணா! உன்நிழல் விரிப்பாயடா!
                                                                        (கல்லுக்குள்....)
விதிவெல்ல பலம் இல்லை
இனிஅழ கண்ணீ ரில்லை                  (விதிவெல்ல..)
ஆட்டங்கள் முடிப்பாயடா!
நானும் மைதானம் இல்லையேயடா!
நானும் மைதானம் இல்லையேயடா!
                                                                         (கல்லுக்குள்....)
வேண்டுதல் உடனேயே
கிடைப்பது அரிதாகும்                         (வேண்டுதல்...) 
காலங்கள் தாழ்த்தாதடா!
கண்ணா! முடிந்தபின் அதுஎதற்கடா!
கண்ணா! கருணைகூர் பார்வாயடா!
                                                                         (கல்லுக்குள்....)
விதியோடு திமிர்சூழ
பாவங்கள் பலசெய்து                          (விதியோடு.....)
பாவியாய் ஆனேனடா  !
கண்ணா! பாவங்கள் கழிப்பாயடா!
கண்ணா! மன்னித்து அருள்வாயடா!
                                                                          (கல்லுக்குள்....)
கண்டகனா நினைவோடு
இலட்சியங்கள் கனவோடு               (கண்டகனா....) 
நினைவுத்தூண் ஆனேனடா!
கண்ணா! கைதந்து காப்பாயடா!
கண்ணா! நிம்மதி தருவாயடா !          
                                                                          (கல்லுக்குள்....)

- கண்ணன் காலடியில்
   சரவணபெருமாள் 

ராகம்
படம்      : கர்ணன்
பாடல்  : உள்ளத்தில் நல்ல உள்ளம்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...