புலிவாலைப்பிடித்தேன்
தந்தாரும் வந்தாரே!
தடுப்பாரும் வந்தாரே!
சோறு தந்து
ஆடை தந்து
ஆரம்பப்பள்ளி தந்தாரும் வந்தாரே!
ஆதார் கேட்டு
சோறு தடுத்து
காயவிட்டாரும் வந்தாரே!
பள்ளிப் பிள்ளைக்கு
பயண அட்டை
இலவசம் என்றாரே!
பள்ளிச்சீருடை பார்த்தாலே
நிறுத்தாப்பேருந்தை
வேடிக்கையும் பார்த்தாரே!
ஒத்தக்கருத்தும்
ஒருங்கிணைப்பும்
கட்சிக்குள்ளே வளர்ப்பார்
ஒற்றுமையே வலிமையாம்
சாதிமதமும்
சமய உணர்வும்
நாட்டுக்குள்ளே வளர்ப்பார்
ஓட்டு வங்கியாம்
ஆயிரத்தில்
ஆசை வைத்து
கை விரலில் மையை வைத்தேன்
ஆயிரம்
வட்டிமேலே வட்டிபோட்டு
ஜிஎஸ்டி கட்ட நேர்ந்தேன்
நதிகளை இணைக்க
பாடாய் படும் விவசாயிகள்
அணிகளை இணைக்க
பாடுபடும் அரசியல்வாதிகள்
பூனையை விட்டு
புலிவாலைப் பிடித்தேன்
இலங்கைத்தமிழன் அழித்தானை
இறக்க நினைத்து
இந்தியத்தமிழன் அழிப்பானை
ஏற்றிவிட்டோமடா,
இறைவா!
விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்
தெருத்தெருவாய் கூவினாரே!
விவசாயம் பார்க்கோம்
விவசாயி பார்க்கோமென
நடுத்தெருவில் வீட்டினாரே!
விவசாயக்கடன் பேட்டி தந்தான்
வாங்குவதற்குள் உயிர் இல்லை
கடன் வாங்கியும் பயிர் போட்டால்
செடி முளைக்க மழை இல்லை
மழை இறங்கி மண் வந்தால்
வடிந்து செல்ல வாய்க்கால் இல்லை
தானாய் பாதைகண்டு பயணித்த நீரும்
தேங்கி நிற்க கண்மாய் இல்லை
கூடுதலும் குறைதலும்
ஆழப்படுத்தலில்
கிரானைட் குவாரியும்
மீத்தேன் குழியும்
கூடுமப்பா ஆழம்
கண்மாய் பள்ளமும்
குளத்துக்குழியும்
குறையுமப்பா ஆழம்
உழுதுண்டு வாழ்ந்தானை
தொழுதுண்டு வாழ்ந்தானப்போ!
தொழுதுண்டு தொழுதுண்டு
மெய்வளர்த்து உயிர்வளர்த்து
அழுதுண்டு அழுதுண்டு
கால்பிடித்து ஆசனம்பிடித்து
உழுதுண்டு வாழ்ந்தானை
தொழுதுண்டு வாழவிட்டானப்போ!
கோடிகள் கொண்டானை
குடைய முடியாது
எந்திரக்கலப்பை எடுத்தானை
கடன்கேட்டு அடித்ததே
வங்கித்துறை வெற்றி
மானைக்காத்தார்
மாட்டைக்காத்தார்
மனிதனை மறந்தார்
வீட்டைக்காத்தார்
கோட்டை காத்தார்
விவசாயம் மறந்தார்
பாலைவனத்தை
பசுமையாக்கத்தோற்று
பசும்பூமி தஞ்சை
பாலைவனச்சோலையாக
பாடுபடும்
ஹைட்ரோகார்பன்
ஒரு அறிவியல் பிழை
விளைநிலத்தில் திணித்தது
ஒரு ஆட்சிப்பிழை
நாச்சுவற்றுள் யோசித்து
நள்ளிரவில் சட்டம் போட்டாருக்கு
நாற்றிசையில் வாழ்வாரின்
நட்டம் எப்படித்தெரியும்?
வயதாகிலும்
எம் தலைவர்
உலகம் சுற்றும் வாலிபன்
வெளிநாட்டுப் பயணங்களில்
சுற்றுலாத்துறையின்
இளமை ஊஞ்சலாடுகிறது
- Written By,
சரவணபெருமாள்
No comments:
Post a Comment