Thursday, July 20, 2017

வேடம் கட்டியோன் தலைவனாகிறான்; வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்

வேடம் கட்டியோன் தலைவனாகிறான்; 
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்







சாதிகள் இல்லையடி பாப்பா
பாரதி பாட்டு பலகையில்;
பலகை எழுதி வைத்த
பள்ளிக்கூட பெயரோ சாதியில்

எம்மதமும் சம்மதம்
ஏட்டிலே எழுதி வைத்தார்;
எம்மதம் எஞ்சாதி கேட்டு
பதிவேட்டிலும் எழுதிக்கொண்டார்

ஏறிய மேடையெல்லாம்
சாதி இல்லை என்கிறார்;
ஏறாத வாசல் ஏறி
சாதி ஓட்டுக்கலைகிறார்

மக்களைக் கூட்டிவைத்து
மதம்சாரா மன்றம் என்கிறார்;
மக்கள் கலைந்தபின்னே
மதவாத கூட்டணி அமைக்கிறார்

சாதி ஒழிக்கத் துடித்தவரை
சாதி அமைப்பில் முடக்குவார்;
பார் போற்றிய அவர்புகழை
சாதி பெயரில் அடக்குவார்

சமத்துவத்தை வலியுறுத்தி
மனிதசங்கிலியும் தொடங்குவார்;
சமுதாயத்திற்கு இடம் ஒதுக்கீட
போராட்டங்களும் நடத்துவார்

அரசுப்பணி என்றே
போட்டித்தேர்வு வைத்திடுவார்;
இடஒதுக்கல் என்றே
சாதித்தேர்வாய் முடித்திடுவார்

இருண்டால் ஒன்று;
விடிந்தால் ஒன்று
வேடம் கட்டியோன் தலைவனாகிறான்;
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான் 

                                     -Written By,
                                       சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...