வேடம் கட்டியோன் தலைவனாகிறான்;
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்
சாதிகள் இல்லையடி பாப்பா
பாரதி பாட்டு பலகையில்;
பலகை எழுதி வைத்த
பள்ளிக்கூட பெயரோ சாதியில்
எம்மதமும் சம்மதம்
ஏட்டிலே எழுதி வைத்தார்;
எம்மதம் எஞ்சாதி கேட்டு
பதிவேட்டிலும் எழுதிக்கொண்டார்
ஏறிய மேடையெல்லாம்
சாதி இல்லை என்கிறார்;
ஏறாத வாசல் ஏறி
சாதி ஓட்டுக்கலைகிறார்
மக்களைக் கூட்டிவைத்து
மதம்சாரா மன்றம் என்கிறார்;
மக்கள் கலைந்தபின்னே
மதவாத கூட்டணி அமைக்கிறார்
சாதி ஒழிக்கத் துடித்தவரை
சாதி அமைப்பில் முடக்குவார்;
பார் போற்றிய அவர்புகழை
சாதி பெயரில் அடக்குவார்
சமத்துவத்தை வலியுறுத்தி
மனிதசங்கிலியும் தொடங்குவார்;
சமுதாயத்திற்கு இடம் ஒதுக்கீட
போராட்டங்களும் நடத்துவார்
அரசுப்பணி என்றே
போட்டித்தேர்வு வைத்திடுவார்;
இடஒதுக்கல் என்றே
சாதித்தேர்வாய் முடித்திடுவார்
இருண்டால் ஒன்று;
விடிந்தால் ஒன்று
வேடம் கட்டியோன் தலைவனாகிறான்;
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்
-Written By,
சரவணபெருமாள்
No comments:
Post a Comment