Wednesday, July 12, 2017

அதனால்தான் பயமாய் இருக்கிறது!

அதனால்தான் பயமாய் இருக்கிறது! 





இனிவரும் காலம் என்னவோ?
பயமாய் இருக்கிறது!

போட்டிகள் வரலாம்
பெட்ரோல் விற்பனை நிலையத்தோடு
தண்ணீர் விற்பனை நிலையம் 
போட்டியாய் வரலாம்

பணம் சம்பாதிக்கலாம்
விவசாய விளைநிலத்தை
விற்பனை விலைநிலமாக்கி
பஞ்சத்தையும் சம்பாதிக்கலாம்

வசதியாய் வாழலாம்
கம்மங்கதிர் முளைத்த காட்டில்
கட்டிடங்கள் முளைத்து
பசியோடும் வாழலாம்

டிஜிட்டலாய் மாறலாம்
பருப்பும் அரிசியும் போட்டகடை
பணத்தை கணக்கில் போட்டு
பசியையே தீர்த்ததாய் நினைக்கலாம்

மெத்தனங்கள் போகலாம்
வாய்புசி தண்ணீரில் வாராஅக்கறை
கைபேசி கட்டணத்தில்
சிக்கனம் ஆகலாம்

போக்குவரத்து முன்னேறலாம்
ஆளுக்கொரு இருசக்கர
வீட்டுக்கிரு நாசக்கர வாகனபந்தா
மாசுபட்ட காற்றாய் முன்னேறலாம்

தமிழ்பண்பாடு வளரலாம்
கட்டுக்கடங்கா காளையை
கையடக்க கைபேசியில் அடக்கி
வீரத்தை நிலைநாட்டலாம்

குற்றவாளிகள் கூடலாம்
ஓடியாடி விளையாடா சிறுவர்
ஓரிடத்தில் விளையாடி
கணிப்பொறியிடம் கைதியாகலாம்

சட்டங்களை மதிக்கலாம்
தடியெடுத்தவன் தண்டல்காரன்
பிடிபட்டவன் குற்றவாளி
எழுதப்பட்டது தீர்ப்பாகலாம்

நீதிகள் கிடைக்கலாம்
நித்தம் நித்தம் அலைந்து
நீதி  கேட்டவன் செத்தபின்
நீதிகள் கிடைக்கலாம்

புதியன புகலாம்
விவசாய திட்ட நுட்பத்தினும்
மதுக்கடை திறநுட்பத்தில்
புதுத்திட்டம் புகலாம்

உடற்பயிற்சி செய்யலாம்
தினமொன்றில் ஆதாரை
திடீரென இணைத்திட
நடைபயிற்சி செய்யலாம்

தேசக்கடன் அடைக்கலாம்
உழைத்து சம்பாதித்த பணம்
வரியாக வழங்கி
நிதிச்சுமை குறைக்கலாம்

கடன் தள்ளுபடியாகலாம்
கார்ப்பரேட் கடன் மெல்ல குறைத்து
விவசாய கடன் கழுத்தை நெறித்து
உயிரும் தள்ளுபடியாகலாம்

மரணம் வரலாம்
விவசாயி மாண்டு விவசாயம் மாண்டு
பஞ்சத்தில் வந்த பசியில்
எனக்கும் மரணம் வரலாம்

அதனால்தான்,
பயமாய் இருக்கிறது!

                 - Written By,

                   சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...