Friday, April 28, 2017

சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா

சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா






ஐந்து மணிக்கே விழிப்பேன்
 அலறும் கடிகாரம் இல்லை
"கிக்கீ கிக்கீ" கிளியின் சத்தம்
"குக்கூ குக்கூ" குயிலின் பாட்டு
"கொக்கரக்கோ" சேவலின் கூவல்
 சுப்பனுக்கோ நாட்டுப்புறம் நாவில்

வைகறை நேரம் ஏர்சுமந்து

           வரப்போரம் வழி நடைநடந்து
உழவனின் தோழன் மாடிரண்டு
            உழுதிட முனைந்தேன் ஏர்பிணைந்து

யாம் காலடிவைத்தால் வயலோரம்

            யாருக்கும் யாவுக்கும் வயிறாறும்
உச்சந்தலையில் சூரியன் மிதிக்க
            உள்ளங்காலை நிலத்தன்னை சுமந்தாள்
இளைப்பாற சாய்கின்ற வரப்போரம்
            நிலத்தன்னை மடிதான் நினைப்போரம்

மணலை விலக்கினேன் ஆற்றங்கரையில்

           ஊறுது தண்ணீர் சிச்சிறுசுனையில்
மண்டியிட்டு தண்ணீர் குடித்தேனா
           மாராப்பை  விலக்கிப் பால்குடித்தேனா
அடடா ஒரு உண்மை
           புவியும் ஒரு அன்னை

பஞ்சத்தில் திளைத்தும்

பகட்டுக்கு பருத்தி போட்டேன்
பசித்தும் புசியாது
பஞ்சணைக்கு பஞ்சளித்தேன்

எங்கும் எதிலும் ஆக்கியானுக்கே மதிப்பு
விதியே கதியா?
ஆள்பவன் சதியா?
விற்போனுக்கு வரவேற்பு
பிதட்டோனுக்கு அப்பொறுப்பு
விளைவித்தவன் மதிப்பு
மறுப்பு

போதாதென்று,


கைபேசி கோபுரம் கட்டமைத்தான்

கதிர்வீச்சு தானாய் கட்டவிழ்ந்தது
கண்ணுக் கழகான சிட்டழிந்தது
படபட பட்டாம்பூச்சி படையழிந்தது
கவிதைக்கு இரையாகும் கிளியைக்காணோம்
இசைக்குப் பெயராகும் குயிலைக்காணோம்

விளைநிலத்தில் ளகரம் பெயர்ந்து

விலைநிலம் ஆகிப் போனதம்மா
வீதியிரு மருங்கில் மரங்கள்சாய்ந்து
நான்கு வழிச்சாலை ஆனதம்மா
தோண்டினாலே தண்ணீர்வரும் நிலைமாறி
ஆழ்துளை போட்டுறிந்து காற்றம்மா
மரங்களை அழித்து மழை அழித்து
மழை வரம் கேட்டு யாகமம்மா

இனிவரும் காலமே அம்மா அம்மா
இப்படியே போனால் எப்படியம்மா
சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா


                                                 - Written By,

                                                   சரவணபெருமாள்


Thursday, April 27, 2017

அன்னை தெரசா

அன்னை தெரசா






மானுடத்தில் பிறந்த கடவுளும் உண்டு
தேடியதில் இந்த தெய்வமும் ஒன்று

தாய்மை என்பது பிள்ளைப்பேறா
சேய்மை அல்லால் தழுவாதவரா

தொற்று என்று விலகியநபரா
தொழுநோய் கண்டு நழுவியமனரா

தனிமை நினைத்து தயங்கியரில்லை
தாழ்உயர் பார்த்து உதவியரில்லை

தாய்மை ஒன்றே பாசமன்று
தாய்மை வரினும் நேசமுண்டு

இவ்வாறே
கருணை மனதில்
            கடவுளைத் தேடினேன்
அன்னைதெரசா என்று
            காகிதத்தில் எழுதினேன்


                                    Written By,
                          சரவணபெருமாள்

Monday, April 24, 2017

வலிய விதியடா!

வலிய விதியடா!




புதைத்தேன்
நெல்லைப் புதைத்தேன்
நெல்லோடு உழைப்பைப் புதைத்தேன்
காலடியை தண்ணீரில் நனைத்தேன்
தலைமுடியை வெயிலில் நனைத்தேன்
நெல் விளைந்தது
சோறு குழைந்தது
சாவகாசமாய் நானமர்ந்து உண்டதில்லை
வலிய விதியடா!
 
மண்வெட்டி பிடித்தேன்
மண்ணைப் பிளந்தேன்
கடப்பாறை பிடித்தேன்
கல்லைப் பெயர்த்தேன்
காய்த்துப்போன கைகள்
விரைத்துப்போன விரல்கள்

அம்மம்மா….!
    ஒரு வாயென்றாலும்,
      கையில் அள்ளித்தின்ன பசிபோகும்
நாசமான நாகரீகம் - இன்று
    சோற்றை அள்ளித்தின்ன
    கரண்டி இடைத்தரகன்

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்றான்
என்ன உலகமடா?
அரிசியாய் வந்தபோது
      சோறாக்கி உப்பிட்ட தாய்
      முதியோர் இல்லத்தில்
நாற்றாய் நிமிர்ந்தபோது
      மண்ணால் உப்பிட்ட நிலத்தில்
      கட்டிடங்கள்
நெல்லாய் இருக்கும்போது
      வேர்வையில் உப்பிட்டன்
      கோவணத்தில்
வலிய விதியடா!  

தூங்கியவனை எழுப்பினேன்
எழுந்து பார்த்து என்ன என்றான் – காது
கேளாதவனை தட்டினேன்;
திரும்பிப்பார்த்து என்ன என்றான் – ஐயா
“தூங்கிவிட்டேன்” என்றுசொல்லி
      தூங்குவானை எப்படி எழுப்புவேன்
நாற்பது நாளாய் கத்தியும்
     கண்ணெதிரே நின்று
கேளாதுபோல் நிற்பானை என் செய்வேன்
“தெரியாது” எனவே பேட்டியளிப்பனை என் செய்வேன்
“எழுப்பித்தான் பாரேன்” என்கிறானோ?
 
பளபளப்பான ஆடைக்கு பருத்தி போட்டேன்
நான் அணிந்தது கோவணமும் வேட்டியும் தான்!
வெள்ளைவெளேரென்ற அரிசி கொடுத்தேன்
நான் உண்பது அரை வயிறு தான்
உயர்ந்து நிற்கும் மரங்கள் நட்டேன்
நான் உழுவதும் திரிவதும் வெயிலில் தான்
உருவாக்கியும் அனுபவிக்க முடியாத
      துர்பாக்கியசாலி நான்
உழைப்பே இல்லாமல் அனுபவிக்கும்
      பாக்கியசாலி நீ
வலிய விதியடா!

உண்பது என் அரிசி
உண்டும் தொலைக்காட்சி பசி
      நீயா? நானா? என்று
உடுப்பது என் பருத்தி
மஞ்சள் ஆடை பைத்தியக்காரன்
      மண்வெட்டி வேண்டாம் என்கிறான்
ஜெர்மனி உதாரணம் தந்த உதாசீனமது
          அதற்கு தெரியுமோ? தெரியாதோ?
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு
          உணவிட்டது எம் விவசாயிகள்

விற்றோமே நம் ஓட்டை ஒருமுறைதான்-ஐயா
பெற்றோமே அதன் பலனை தினம்தினம்தான்
வீழ்ந்தாரே நம் காலில் ஒருமுறைதான்-ஐயா
      வீழ்ந்தோமே விவசாய பெருங்குடிதான்
தண்ணீருக்காக நாம் டெல்லி சென்றோம்-ஐயா
      கண்ணீர் வற்றிய குளங்கள் மிச்சம்
வலிய விதியடா! 

                                      -  Written By,
                                        சரவணபெருமாள்
குறிப்பு:
தண்ணீருக்காவும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வேண்டி, டெல்லியில் பிரதமரை சந்திக்கச்சென்ற விவசாயிகள் போராட்டம் நாற்பதாவது நாளைக்கடந்த சமயத்தில் நிகழ்ந்தவற்றத்தழுவி எழுதப்பட்ட வரிகள் இவை.

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...