Wednesday, September 20, 2017

தானமும் என் சுயநலமே

தானமும் என் சுயநலமே




அன்பால்
கோடிபேரது உள்ளங்களில்
உட்கார்ந்திடக்கூட ஆசையில்லை

யாரென்றே தெரியாதவரில்
உயிருக்கு உதிரமாய் வாழ
இரத்ததானமிட ஆசை

கண்கட்டியே கண்ணாமூச்சி
கட்டாமலே காலம்கடப்பார்
கட்டவிழ்ந்து காட்சிபெற
கண்தானமிட ஆசை

செத்தால் சிதைந்துபோகும்
கொடுத்தால் ஈருயிர் மீளும்
சிறுநீரக தானமும் ஆசை

தொட்டுவிட்டது மரணம் என்றால்
துரத்தப்படும் ஒருவர்
நெஞ்சுக்குள் துடித்திடும்
இதயமாக ஆசை

கொடைவள்ளலாக ஆசையில்லை
உயிர்போனபின்னும்
உடல்உறுப்பு வாழட்டுமே
வாழ்கவே 
என் சுயநலமே 


                             - Written By

                                சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...