தானமும் என் சுயநலமே
அன்பால்
கோடிபேரது உள்ளங்களில்
உட்கார்ந்திடக்கூட ஆசையில்லை
யாரென்றே தெரியாதவரில்
உயிருக்கு உதிரமாய் வாழ
இரத்ததானமிட ஆசை
கண்கட்டியே கண்ணாமூச்சி
கட்டாமலே காலம்கடப்பார்
கட்டவிழ்ந்து காட்சிபெற
கண்தானமிட ஆசை
செத்தால் சிதைந்துபோகும்
கொடுத்தால் ஈருயிர் மீளும்
சிறுநீரக தானமும் ஆசை
தொட்டுவிட்டது மரணம் என்றால்
துரத்தப்படும் ஒருவர்
நெஞ்சுக்குள் துடித்திடும்
இதயமாக ஆசை
கொடைவள்ளலாக ஆசையில்லை
உயிர்போனபின்னும்
உடல்உறுப்பு வாழட்டுமே
வாழ்கவே
என் சுயநலமே
- Written By
சரவணபெருமாள்
அன்பால்
கோடிபேரது உள்ளங்களில்
உட்கார்ந்திடக்கூட ஆசையில்லை
யாரென்றே தெரியாதவரில்
உயிருக்கு உதிரமாய் வாழ
இரத்ததானமிட ஆசை
கண்கட்டியே கண்ணாமூச்சி
கட்டாமலே காலம்கடப்பார்
கட்டவிழ்ந்து காட்சிபெற
கண்தானமிட ஆசை
செத்தால் சிதைந்துபோகும்
கொடுத்தால் ஈருயிர் மீளும்
சிறுநீரக தானமும் ஆசை
தொட்டுவிட்டது மரணம் என்றால்
துரத்தப்படும் ஒருவர்
நெஞ்சுக்குள் துடித்திடும்
இதயமாக ஆசை
கொடைவள்ளலாக ஆசையில்லை
உயிர்போனபின்னும்
உடல்உறுப்பு வாழட்டுமே
வாழ்கவே
என் சுயநலமே
- Written By
சரவணபெருமாள்
No comments:
Post a Comment