ஆழம் இல்லை!
அகலம் இல்லை!
ஆனால், சமுத்திரம்!
எச்சரிக்கை பலகையில்லை!
எதேச்சையாய் நோக்க
எட்டி இழுத்துவிட்டது என்னை,
விழி அலை!
சத்தம் இல்லை!
சலனம் இல்லை!
எதிர்நீச்சல் போட்டேன்!
கடல்கன்னிக்கு
கண்ணி வைத்து
கைதியாக்கினேன்!
எம் காதல்கோட்டையில்
செவித்தூதனும்
நாத்தூதனும்
விடுப்பெடுக்க,
விழித்தூதன்
இமைகளுக்கு விடுப்பளித்தான்!
தமிழ்மொழியின் இன்பரசம்
விழிமொழி தொடுவதால்,
செவியையும் நாவையும்
பணிநீக்கமே செய்திடலாம்!
அதோ!
வரவேற்பு வசனமின்றி
வரும் நிலா,
என்னவளின் அழகு!
அதன் மௌனஒலிகள்
இதயம் துளைக்க,
இருள் தொலையும்!
இம்மௌனமே
எம்காதல் மூச்சாக,
பேச்செதற்கு?
நிசப்தம் காதல்வசம்!
- சரவணபெருமாள்
அகலம் இல்லை!
ஆனால், சமுத்திரம்!
எச்சரிக்கை பலகையில்லை!
எதேச்சையாய் நோக்க
எட்டி இழுத்துவிட்டது என்னை,
விழி அலை!
சத்தம் இல்லை!
சலனம் இல்லை!
எதிர்நீச்சல் போட்டேன்!
கடல்கன்னிக்கு
கண்ணி வைத்து
கைதியாக்கினேன்!
எம் காதல்கோட்டையில்
செவித்தூதனும்
நாத்தூதனும்
விடுப்பெடுக்க,
விழித்தூதன்
இமைகளுக்கு விடுப்பளித்தான்!
தமிழ்மொழியின் இன்பரசம்
விழிமொழி தொடுவதால்,
செவியையும் நாவையும்
பணிநீக்கமே செய்திடலாம்!
அதோ!
வரவேற்பு வசனமின்றி
வரும் நிலா,
என்னவளின் அழகு!
அதன் மௌனஒலிகள்
இதயம் துளைக்க,
இருள் தொலையும்!
இம்மௌனமே
எம்காதல் மூச்சாக,
பேச்செதற்கு?
நிசப்தம் காதல்வசம்!
- சரவணபெருமாள்